search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளை சம்பவம்"

    • சி.சி.டி.வி காமிரா பதிவை கைப்பற்றி போலீசார் விசாரணை
    • கதவை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம மனிதன் யார்?

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே உள்ள கண்ணாட்டுவிளையில் அரசு தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

    இங்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பிறகு நேற்று காலை பணியாளர்கள் பணிக்கு வந்தனர். மேல்நிலைப்பள்ளிக்கு வந்தவர்கள் கதவை திறந்ததும் பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். கண்காணிப்பு காமிராவும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார். மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சி.சி.டி.வி. காமிரா பதிவு களை கைப்பற்றி ஆய்வு செய்த போது, மர்ம மனிதன் ஒருவன், இரும்பு கம்பியால் கதவு தாழ்ப்பாளை உடைத்து திறப்பதும் தலைமை ஆசிரியர் அறை யில் உள்ள பீரோவை திறப்பதும் பதிவாகி இருந்தது. அங்கு ஏதும் கிடைக்காததால் தொடக்கப் பள்ளிக்கும் மர்ம மனிதன் சென்றுள்ளான். அங்கும் எதுவும் கிடைக்காததால் கண்காணிப்பு காமிராவை சேதப்படுத்தி விட்டு சென் றுள்ளதும் தெரியவந்தது.

    பள்ளிக்கூடத்திற்குள் கொள்ளையன் புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தொடக்கப் பள்ளியில் உள்ள குடிநீர் குழாய்களை மர்ம நபர் உடைத்து எடுத்து சென்ற சம்பவம் நடந்தது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் இதுவரை திருடர்கள் யார்? என்பது கண்டு பிடிக்கப்படாமலேயே உள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு தான் 2 பள்ளிகள் மற்றும் அதன் வளாகத்தில் 9 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இருப்பினும் மீண்டும் ஒரு கொள்ளை சம்பவம் நடந்திருப்பதும் கண் காண்கணிப்பு காமிரா சேதப்படுத்தப்பட்டு இருப்பதும் அந்த பகுதியில் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. தற்போது காமிரா வில் பதிவான உருவத்தை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    ×